சாப்பிட மறந்து போகும் இன்றைய தலைமுறைக்கு சோறு தண்ணீர் மட்டுமில்ல ஆக்சிஜனே கூட செல்ஃபோன் தான். அப்பா அம்மாவை விடவும் நெருக்கமான ஒன்றாக செல்ஃபோனை கருதுகின்றன குழந்தைகள். உள்ளங்கைகளையோ பிடித்தவர் முகத்திலோ கண்விழிக்கும் காலம் போய் செல்ஃபோன் பார்த்துதான் பலரும் தம் அன்றைய நாளைத் துவக்குகின்றனர்.