இந்து சமய வழிப்படுகளில் முதன்மையாக வணங்கும் தெய்வம் விநாயகர். பிள்ளையார் சுழியிலிருந்து ஆரம்பித்து பிள்ளையார் பிடித்து வைப்பது, எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையாருக்கு தேங்காய் அர்ப்பணிப்பது வரை நமது காரியங்கள் பிள்ளையாருடன் அதாவது விநாயகருடன் ஒட்டியதாகவே நடைபெற்று வருகின்றன.