இருவரும் முனிவரின் கால்களில் விழுந்து வணங்கி, மன்னிப்பு கேட்டு சாபவிமோசனம் பெற்றனர். மந்தாரன் மந்தார மரமாகவும், சமி வன்னி மரமாகவும் மாறி-விட்டனர். விநாயகர் அவ்விடத்தில் தோன்றி நீங்கள் இருவரும் விருச்சங்களாகவே இருந்து எல்லாச் சிறப்புகளையும் அடைவீர்கள். யாவரும் வணங்கும்படியாக அம்மரங்களின் நிழலில் நான் வசித்திருப்பேன். அம்மரங்களின் நிழலில் இருக்கும் என்னை வழிபடுபவர்ளுக்கு சகல தீவினைகளும், துன்பங்களும் நீக்கும் என்று அருளினார். அன்று முதல் வன்னி மரத்தடி விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக கருதப்பட்டார். சதுர்த்தியன்று விநாயகப் பெரு-மானின் காரிய சித்தி மாலையை 8 முறை படித்தால் அட்டமா சித்திகள் கிட்டும். விநாயகப் பெருமானை வழிபட்டு எல்லாவித நலன்களும் பெறுவோமாக.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.